Girl in a jacket

சிதம்பர ரகசியத்தன்மை

 

ஆழ்ந்த வாசிப்பும் ஆர்வமும் பயிற்சியும் கூடியவர் மா. அரங்கநாதன். அதன் விளைவாகத்தான் அடிப்படையில் தான் ஒரு கவிஞராக இல்லாத போதும் கவிதை பற்றி மிக அகல் விரிவாக கருத்துரைக்க முடிந்திருக்கிறது அவரால்.

சில நவீன தமிழ்க் கவிதைகளை இழை பிரித்து அவர் அர்த்தப்படுத்தியுள்ள பாங்கு சம்பந்தப்பட்ட கவிதைகளை எழுதியவருக்கு கிடைத்த உண்மையான கௌரவம்.

ஒரு வித Detached attachment உள்ள மனிதராய் அவர் வாழ்க்கையை அவதானிப்பது போல கதாபாத்திரங்களையும் அவர் உருவாக்குகிறார் என்று கூறலாம்.

சாதாரண மனிதர்களாக வழக்கமாக தினசரி வேலைகளில் ஈடுபட்டு வருபவர்களாக ஆரம்பமாகும் அவர் கதை மாந்தர்கள் கதை முடியும் போது வாசகமனங்களில் ஒரு அமானுஷ்ய அதிர்வை ஏற்படுத்தத் தவறுவதில்லை.

வெளித்தோற்றத்துக்கு எளிமையானதாக நேரிடையானதாக காட்சியளிக்கும் அவருடைய எழுத்து உண்மையில் ஒரு சிதம்பர ரகசியத்தன்மை கொண்டது.

- லதா ராமகிருஷ்ணன்.


 
புகைப்படங்கள்




ஆவணப்படம்

முன்றில் முன்னுரைகள் மேலும் தொடரலாம் முகவரி

முன்றில் பத்திரிகை பற்றிய நினைவுகள் என்று கூறும் அளவிற்கு முன்றில் பழம்பெரும் பத்திரிகை அல்ல. ஆனால் எனக்கு வயதாகிறது. நினைவுகள் மங்குகின்றன, அந்தப் பத்திரிகை

More...





மா. அரங்கநாதன்
பிளாட் எண் : 163,
நான்காவது குறுக்குத் தெரு
D.R. நகர்
புதுச்சேரி - 605013
தொலைபேசி : 0413 2244788

மின்னஞ்சல் : maaranganathan@gmail.com


© 2011 All Rights Reserved